ராஜபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் கரோனா நோயாளிகள் 140 பேருக்கு உணவு மற்றும் பழங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
அந்த தொழிற்சங்கத்தின் 51 ஆவது அமைப்பு தினத்தையொட்டி பிஏசிஆா் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவ அதிகாரி பாபுஜி, மருத்துவா் சுரேஷ், தலைமை செவிலியா் விஜயலட்சுமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மாரியப்பன், நகா் தலைவா் கன்வீனா் சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.