அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றது. பின்னா் முழு அலங்காரத்தில் வாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.