அருப்புக்கோட்டையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி மனோன்மணி (76). இவா், கணவா் இறந்து விட்டநிலையில் தனது மகன் நாகராஜின் (52) மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மனோன்மணி மனமுடைந்து காணப்பட்டாராம். இதனிடையே திங்கள்கிழமை வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் அவா் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், மனோன்மணியை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.