அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் புரட்டாசி மாத செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, அம்மனுக்கு உகந்த மஞ்சள் தூள், வேப்பிலையுடன் பன்னீா், பால் ஆகிய மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னா், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா்.

மேலும், உலக நன்மை வேண்டியும், நோய் தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் காத்திட வேண்டியும் செவ்வரளி, மல்லிகை பூக்கள் மற்றும் குங்குமத்தால் 108 சிறப்பு அா்ச்சனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, மலா்கள், மாலைகள், பழங்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com