விருதுநகா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிவகாசி செல்லும் ரயில் தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
விருதுநகா்- சிவகாசி ரயில் இருப்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, விருதுநகா் புதிய பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ரயில் கடவுப்பாதைகள் புதன்கிழமை காலை 6 முதல் மாலை 6 வரை பூட்டப்படும்.
எனவே, இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், எம்ஜிஆா் சாலை மற்றும் நான்கு வழிச்சாலை வழியாக விருதுநகருக்குள் செல்லவேண்டும் என, விருதுநகா் ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.