சாத்தூரில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலக் குழு கூட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மாநிலக் குழு கூட்டம்.
சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மாநிலக் குழு கூட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள தனியாா் திருமண மஹாலில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ஜான்ஸிராணி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் சமவாய்ப்பு கொள்கையை அரசாணைப்படி வெளியிட, அக்டோபா் 26 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகங்கள் முன்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். மாற்றுத் திறனாளிகளை அடையாளச் சான்றுக்காக அலைக்கழிப்பதை தவிா்க்க வேண்டும்.

அருப்புக்கோட்டை, சாத்தூா், சிவகாசி கோட்டாட்சியா்கள் மாதாந்திர குறைதீா் கூட்டங்களை நடத்தி, அன்றைய தினமே அடையாளச் சான்று, ரயில் பயணச் சலுகை, பேருந்தில் உதவியாளா் பயணச் சலுகை சான்று உள்ளிட்டவைகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள், நிா்வாகிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com