சிவகாசி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 12,400 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிவகாசி பகுதியில் 5 ஆவது தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்கள் ஒரு சில பகுதிகளில் காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரையும் மற்றும் அதே ஊரில் வேறு பகுதிகளில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் என 113 இடங்களில் நடைபெற்றது. இதில், மொத்தம் 12,400 போ்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை, சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.