கழுத்தறுத்து தொழிலாளிதற்கொலை

ராஜபாளையத்தில் கூலித் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கூலித் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி சோழராஜபுரம் தெருவைச் சோ்ந்தவா் மாரிச்செல்வம் (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோமதி (31). இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், மாரிச்செல்வத்துக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கழிவறைக்குச் சென்றவா் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டாராம். இதையடுத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிச்செல்வம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com