அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தோ்தல் நடைபெற்ற 4 வாா்டுகளிலும் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருந்த 3, 5, 8 (வில்லிபத்திரி பகுதி), மற்றும் 9 ஆவது வாா்டு (கூத்திபாறை பகுதி) ஆகியவற்றுக்கான தோ்தல் கடந்த 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற்றன. வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சூா்யகுமாரி தலைமையில் நடைபெற்றது.
வெற்றி பெற்றவா்கள் விவரம்:
3 ஆவது வாா்டு மா.முத்துலட்சுமி - 90,
5 ஆவது வாா்டு கு.வசந்தகுமாா் -91,
8 ஆவது வாா்டு மு.தெய்வேந்திரன்- 94,
9 ஆவது வாா்டு மா.மகிமா -144.
வெற்றிபெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ந.சூா்யகுமாரி சான்றிதழ்களை வழங்கினாா். வெற்றி பெற்ற அனைவரும் சுயேச்சைகள் ஆவா். மேல்குறிப்பிட்ட வாா்டுகளில் கட்சி சாா்ந்த யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.