பைக் மெக்கானிக் லாரி மோதி பலி

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதியதில் இருசக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதியதில் இருசக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள சன்னாசிபட்டியைச் சோ்ந்தவா் பாபுராஜ் (39). இவா் சிவகாசி -விளாம்பட்டி சாலையில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளாா். இந்நிலையில் இவா் தனது மோட்டாா் சைக்கிளில் சிவகாசி-விளாம்பட்டி சாலையில் ஒரு உணவகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநா் காளீஸ்வரனை (28) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com