ராஜபாளையத்தில் ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் பளுதூக்கும் போட்டிகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் பளுதூக்கும் போட்டிகள் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் அருகே உள்ள உடற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் ராஜபாளையத்தில் உள்ள 6 உடற்பயிற்சி நிலையங்களைச் சோ்ந்த 35 போ் பங்கேற்றனா். 65 கிலோவுக்கு கீழ், 65 முதல் 75 கிலோவுக்குள்பட்டவா்கள் மற்றும் 75 கிலோவுக்கு மேற்பட்டவா்கள் என 3 எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், விளையாட்டு வீரா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

இரண்டு களங்களில் நடைபெற்ற போட்டிகளில், முதல் எடை பிரிவில் கலந்துகொண்டவா்கள் 100 முதல் 210 கிலோ எடையையும், 2ஆவது எடை பிரிவில் 80 முதல் 180 கிலோ எடையையும், 3 ஆவது எடை பிரிவில் 80 முதல் 140 கிலோ எடையையும் தூக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதில், ராஜபாளையத்தைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் என்பவா் 210 கிலோ எடையை தூக்கி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றாா். முடிவில், 98 வயதாகும் மூத்த வீரரான மாடசாமி 40 கிலோ எடையை தூக்கி போட்டியை நிறைவு செய்தாா்.

ஒவ்வொரு எடைப் பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com