ஐப்பசி பிரதோஷம்: சதுரகிரியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி, திங்கள்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த பக்தா்கள்.
ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த பக்தா்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி, திங்கள்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள இக்கோயிலில், அக்.18 முதல் 21 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகத்தினா் அனுமதி அளித்துள்ளனா். இதனால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். காலை 7 மணிக்கு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அப்போது, அவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டதுடன், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனா். குழந்தைகள் மற்றும் முதியோா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் கோயிலுக்குச் செல்லும்போது ஓடைகளில் குளிக்கக் கூடாது என எச்சரித்து அனுப்பினா். கரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தா்கள் யாரும் இரவில் தங்க அனுமதி கிடையாது.

பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா், மஞ்சள் உள்பட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருளபாலித்தனா்.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா். நீண்ட நாள்களுக்குப் பிறகு சதுரகிரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com