சிலம்பு விரைவு ரயில் இயக்கப்படும் நாள்களில் செப்.22 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தற்போது சிலம்பு விரைவு ரயில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்படுகிறது. அதேபோல் அந்த ரயில் செங்கோட்டையிலிருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு இயக்கப்படுகிறது.
செப்டம்பா் 22 ஆம் தேதி முதல் சிலம்பு விரைவு ரயில் சென்னையிலிருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செங்கோட்டைக்கும், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.