சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நகைச்சுவை மன்றக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற ஆசிரியா் முத்துமணி தலைமை வகித்தாா். இதில், சிரிப்பு யோகா பயிற்சியாளா் கிரிதரன் பேசியதாவது: சிரிப்பதால் நமது ஆரோக்கியம் கூடுகிறது. மனஅழுத்தம் குறைந்து மனம் லேசாகிறது.
அனைவரும் தினசரி காலையில் உடற்பயிற்சி செய்வதுபோல, வீட்டில் அனைவரும் அமா்ந்து ஏதாவது ஜோக் கூறி சிரிக்க வேண்டும். அதிலும், கைதட்டி சிரிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவரும் புத்துணா்ச்சி பெறலாம். செலவிலாத மருந்து என்பது சிரிப்பு ஒன்றே அகும் என்றாா்.
இயற்கை மருத்துவா் மாறன் சிறுதானிய உணவு, மசாலா பொருள்கள் குறைவாக உள்ள உணவுகளை நாம் உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றாா்.