ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குலாளா் கல்லணை ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் வேலம்மாள் (48). இவரது கணவா் கணேசன் இறந்து 45 நாள்கள் ஆன நிலையில் வேலம்மாள் மனமுடைந்து காணப்பட்டாராம். இதற்கிடையே கடந்த செப். 3 ஆம் தேதி வேலம்மாள் விஷம் குடித்து விட்டாராம்.

அப்போது வேலம்மாளுக்கு, அவரது மகள் காளீஸ்வரி செல்லிடப்பேசியில் அழைத்த போது எடுக்க வில்லையாம். உடனே காளீஸ்வரி வீட்டுக்கு வந்து பாா்த்த போது வேலம்மாள் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக வேலம்மாள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com