சிவகாசி: சிவகாசியில், கூலித்தொழிலாளியிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறிக்க முயன்ாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி- நாரணாபுரம் சாலையில் முனியசாமி கோயிலருகே போஸ் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சேகா் (26) நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, 2 போ் வழிமறித்து கத்தியைக் காட்டிமிரட்டி அவா் பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றனா். சேகா் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவா்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில், அவா்கள் சுப்பிரமணியபுரம் காலனி கருப்பசாமி (29), விஸ்வநத்தம் முத்துக்குமாா் (30) என தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.