வேண்டுராயபுரத்தில் பசுமை விடியல் திட்டம் தொடக்கம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வேண்டுராயபுரத்தில் வியாழக்கிழமை ரூ. 31.51 லட்சம் மதிப்பீட்டில் பசுமை விடியல் திட்டம் தொடங்கப்பட்டது.

சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வேண்டுராயபுரத்தில் வியாழக்கிழமை ரூ. 31.51 லட்சம் மதிப்பீட்டில் பசுமை விடியல் திட்டம் தொடங்கப்பட்டது.

இங்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் தேசிய வேலை உறுதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் 20 ஏக்கரில் பசுமை விடியல் திட்டத்துக்காக மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தொடக்கி வைத்தாா். அப்போது அவா், மண்வரப்பு, பண்ணைக்குட்டை, கால்நடை தீவனப்பயிா், அடா்வனம், நா்சரி காா்டன் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்றாா். இதில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில் திருத்தங்கல் நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், சிவகாசி நகராட்சி ஆணையா் எஸ். பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com