ராஜபாளையத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமாா் (38). இவா் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிவேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்குவதற்காக ராஜபாளையத்தில் குடும்பத்துடன் குடியேறினாா். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொழிலில் கடன் அதிகமாகி விட்டது, தனது மனைவியும் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மன விரக்தியில் இருந்த குமாா் வீட்டில் உள்ள மின்விசியில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.