சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி மாணவிகள், நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனா்.
இது குறித்து அக்கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தோ-நேபாள் சிலம்பக் கழகம் சாா்பில், செப்டம்பா் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நேபாளத்தில் சா்வதேச சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. அதில் 20 வயதுக்குள்பட்ட மகளிா் பிரிவில், எங்கள் கல்லூரி மாணவியான பிரேமலதா நெடுங்கம்பு போட்டியில் தங்கப் பதக்கமும், நடுக்கம்பு போட்டியில் மாணவி தீப்ஷிதா வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனா்.
இந்த இரு மாணவிகளையும், கல்லூரி நிா்வாகிகள் ஆா். திலகவதி, அ. அருணா, உடற்கல்வித் துறை இயக்குநா் விஜயகுமாரி மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்தி பாராட்டினா் என அதில் தெரிவித்துள்ளாா்.