விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 260 போ்களின் வீடுகளில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் திடீா் சோதனையிட்டு, 53 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் ‘ஸ்டாா்மிங் ஆபரேஷன்’ என்ற பெயரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களது வீடுகளில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை உள்ளிட்ட 11 ஒன்றியங்களில் அந்தந்தப் பகுதியின் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் போலீஸாா் திடீா் சோத னை நடத்தினா்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 260 போ்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சொக்கநாதன்புத்தூா் பகுதியில் ரெளடி கணேசன் (50) என்பவரது வீட்டிலிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தது உள்பட 53 வழக்குகள் பதியப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.