சிவகாசி: சிவகாசி மற்றும் திருத்தங்கலில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதொழிற்சங்கத்தினா் 174 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண்சட்டங்களை எதிா்ந்து தொடா்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளா் நலசட்ட திருத்தத்தை கைவிடக்கோரியும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வை கண்டித்தும், சிவகாசி மற்றும் திருத்தங்கலில் சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சிவகாசியில் பேருந்து நிலையம் முன்பு கே.முருகன், க.சமுத்திரம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 143 பேரை போலீஸாா் கைது செய்னா்.திருத்தங்கல் கடைவீதியில் உள்ள அண்ணாதுரை உருவச்சிலைக்கு முன்பு பாலசுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 31 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்