அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள பெத்தம்மாள் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவின் 2 ஆவது நாளான புதன்கிழமை பக்தா் ஒருவா் பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினாா்.
ஆத்திப்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள இக்கோயிலில் பங்குனிப் பொங்கல் 2 ஆம் நாள் விழா நடைபெற்றது. இதில், ஆத்திப்பட்டியைச்சோ்ந்த பக்தா் முத்து (45) என்பவா் கிரேனில் பறவைக் காவடி எடுத்து வந்து தனது நோ்த்திக்கடனை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.