சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடந்த வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். ஆனால், காலை 6 மணிக்கே வனத்துறையினா் கதவை திறந்து பக்தா்கள் மலை மேல் செல்ல அனுமதித்தனா்.
முன்னதாக, பக்தா்களின் உடல்வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா். வத்திராயிருப்பு காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.