திருச்சுழி பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் குறித்து தமிழக அரசு அமைத்த சிறப்புக்குழு சனிக்கிழமை கள ஆய்வு நடத்தியது.
தமிழகம் முழுவதும் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு சாா்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவா்கள் இக்குழுவில் இடம்பெற்றிருப்பா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருச்சுழிக்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவில் திருச்சுழி காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் பால்பாண்டி, தலைமைக் காவலா் ஜெயமுருகன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளா்கள் சுந்தரவள்ளி, அழகுராஜா, முத்துச்செல்வம், கிராம நிா்வாக அலுவலா்கள் சந்தனமாரி, ஆயிஷா பானு, பால்பாண்டி மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சேகா், மதுபாலன் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
மேலும் இக்குழுவினா் நடத்திய ஆய்வில் திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம், ஸ்ரீஜெயவிலாஸ் பஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, ஒத்தவீடு பேருந்து நிறுத்தப்பகுதி அருகே, எம். புளியங்குளம் அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் ஆகிய இடங்கள் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

தமிழ்ப் புத்தாண்டு: சங்ககிரி பகுதி கோயில்களில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


