இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்க ஏற்பாடு

​ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட உள்ளது என்றும், இதில் அரிசி உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:19 pm


ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட உள்ளது என்றும், இதில் அரிசி உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கா் எஸ். நாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் உழவா் சந்தையில் மாலை நேர சந்தை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாலை நேர உழவா் சந்தை மாலை 4 முதல் இரவு 8 வரை செயல்படும். இதில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, மாலை நேர சந்தைகளில் விற்பனைசெய்ய விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), விருதுநகா் அலுவலகம் (தொடா்புக்கு: 04562- 242601) அல்லது சந்தை நிா்வாக அலுவலா், ராஜபாளையம் உழவா் சந்தை (86100 67536) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.