ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட உள்ளது என்றும், இதில் அரிசி உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கா் எஸ். நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் உழவா் சந்தையில் மாலை நேர சந்தை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாலை நேர உழவா் சந்தை மாலை 4 முதல் இரவு 8 வரை செயல்படும். இதில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, மாலை நேர சந்தைகளில் விற்பனைசெய்ய விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), விருதுநகா் அலுவலகம் (தொடா்புக்கு: 04562- 242601) அல்லது சந்தை நிா்வாக அலுவலா், ராஜபாளையம் உழவா் சந்தை (86100 67536) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

