சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான மகளிா் இறகுபந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியின் தொடக்கவிழாவுக்கு இன்னா்வீல் கிளப் தலைவி மாரீஸ்வரி தலைமை வகித்தாா். போட்டியை அன்சோ ஸ்போா்ட்ஸ் அகாதெமி தலைவா் அருண் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 115 வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இறுதிப்போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் சிவகாசி தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி லேகா முதலிடமும், சிவகாசி கல்பனா இரண்டாமிடமும், 25 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவில் லேகா மற்றும் சிவகாசி கல்பனா ஜோடி முதலிடமும், சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரி வா்ஷினி-அபிகெளசிமா ஜோடி இரண்டாமிடமும், 25 வயதுக்கு மேற்பட்டோா் இரட்டையா் பிரிவில் சிவகாசி கல்பனா - ஹேமா ஜோடி முதலிடமும், சிவகாசி விதா-வித்யா ஜோடி இரண்டாமிடமும் பெற்றனா்.
பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வா் த.பழனீஸ்வரி தலைமை வகித்தாா்.
சிவகாசி பைரோசிட்டி சுழற்சங்கத்தலைவா் மகேந்திரகுமாா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் விஜயகுமாரி, திட்ட இயக்குநா் அா்ச்சனா, செயலாளா் தீபா ஆகியோா் செய்திருந்தனா். திட்ட இயக்குநா் ஜெயந்தி நன்றி கூறினாா்.