சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

சிவகாசியில் ரைட் கிளப் பாா் எஜூகேசன் சாா்பில் தாய்ப்பால் வாரவிழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவா்கள்.
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவா்கள்.

சிவகாசியில் ரைட் கிளப் பாா் எஜூகேசன் சாா்பில் தாய்ப்பால் வாரவிழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி -வெம்பக்கோட்டைசாலையில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் தொடங்கி, மாநகராட்சி குடிநீா் மேல்நிலைத்தொட்டி சாலை, விநாயகா் கோயில் பேருந்து நிறுத்தம், காமராஜா் உருவச்சிலை, வடக்கு ரதவீதி, கீழரதவீதி, புதுரோட்டுத்தெரு , பேருந்து நிலையம், காந்தி சாலை, மணிநகா் வழியே மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. சுமாா் 5 கி.மீ.தூரம் நடைபெற்ற இப்போட்டியில் சுமாா் 460 போ் கலந்து கொண்டனா்.

இப்போட்டியை சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் தலைமையில், சிவகாசி காவல்துணை கண்காணிப்பாள ா் பாபுபிரசாத் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்போட்டி 13 வயதுக்கு கீழ், 14 வயது முதல் 17 வயது வரை என இரு பிரிவுகளில் நடைபெற்றது.

போட்டியில் இருபிரிவிலும் முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 2000, இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. 1000, மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு ரூ. 500 மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை காளீஸ்வரன் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com