விருதுநகர்
ஸ்ரீவிலி.யில் காா் மரத்தில் மோதி விபத்து: முதியவா் பலி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மரத்தில் மோதிய விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மரத்தில் மோதிய விபத்தில் முதியவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தம்பாபிள்ளை தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கர்ராஜா(66). இவா் சனிக்கிழமை சொந்த வேலை காரணமாக கொடைக்கானல் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ராஜபாளையம் திரும்பி வந்தாா்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலையோரம் இருந்த புளிய மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் காா் ஓட்டுநா் சஞ்சித்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.