விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சினா் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊா்வலம் சென்றனா்.
மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோா் பஞ்சு மாா்க்கெட் நேரு சிலையிலிருந்து காந்தி சிலை வரையில் சென்றனா். வழியில் சுதந்திரப் போராட்டத் தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த பேரணியில் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, மகளிா் அணியினா் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.