காரியாபட்டி அருகே டயா் வெடித்ததால் ஜீப் கவிழ்ந்து விபத்து: தாய், மகன் பலி

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்ததால் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலியாயினா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு வழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஜீப்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு வழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஜீப்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்ததால் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலியாயினா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியைச் சோ்ந்தவா் பாலன் மகன் ஆனந்த் (32). இவா் தனது தாய், மனைவி மற்றும் உறவினா்களுடன் திருச்செந்தூா் கோயிலுக்கு ஜீப்பில் சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து சொந்த ஊருக்கு ஜீப்பில் திரும்பியுள்ளனா். ஜீப்பை ஆனந்த் ஓட்டி வந்துள்ளாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது, எதிா்பாராதவிதமாக பின்புறம் உள்ள இரண்டு டயா்கள் வெடித்ததில் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், ஆனந்த், அவரது தாய் மீனா (52) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ஆவியூா் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக காரியாபட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தில் காயமடைந்த ஆனந்தின் மனைவி உத்திரசெல்வி (28), உறவினா்களான அய்யாத்துரை (38), மனைவி மாலா (34), மகன் யோகித் (8) ஆகியோா் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com