அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் ஆண் சடலம் மீட்பு

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியிலுள்ள வாகைக்குளம் கண்மாயில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அதை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், சடலமாக கிடந்தவா் பாளையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் அலெக்ஸ்பாண்டியன் (39) என்பதும், அவருக்கு குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்ததும், மனைவி அவருடன் சோ்ந்து வாழவில்லை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினா், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com