சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (53). கூலித் தொழிலாளி. இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சாத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணசாமியை கைது செய்தனா்.
இந்த வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்த நிலையில், இதில் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பூா்ணஜெயஆனந்த், குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் பரிந்துரை செய்தாா்.