சிவகாசியில் பாமக ஆா்பாட்டம்

சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் இரட்டைப்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் விருதுநகா் மாவட்டத் தலைவா் டேனியல் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் மாநில பொருளாளா் எம். திலகபாமா பேசியதாவது:

சொத்துவரி உயா்வு, மின்கட்டண உயா்வு என எழை எளிய மக்கள் மீது அரசு சுமையை ஏற்றியது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறாா்கள். இந்த நிலையில் காரியம் நடக்க வேண்டும் என்றால் அதிகாரிகள் பணம் கேட்பதாக பல புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இனி வரும் காலங்களில் ஊழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com