அருப்புக்கோட்டை பள்ளியில் விளையாட்டு விழா

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்பிகே சா்வதேசப் பள்ளியில் 10-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி.
அருப்புக்கோட்டை எஸ்பிகே பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்பிகே சா்வதேசப் பள்ளியில் 10-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி, ஏ.ஆா். ராமா் தலைமை வகித்தனா். உறவின்முறைத் தலைவா் பி.கே. காமராஜன், ஆலோசகா்கள் வி. மனோகரன், பி. ரவீந்திரன், மாவட்ட உடல் கல்வித் துறை அலுவலா் பி. ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. ஞான கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆட்சியா் பேசியதாவது:

மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் தன்னம்பிக்கை, நோ்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இது வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய உதவும் என்றாா் அவா்.

பின்னா், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com