பாலத்தின் சுவற்றில் தூங்கியவா் தவறி விழுந்து சாவு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் சுவற்றில் படுத்து தூங்கியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் சுவற்றில் படுத்து தூங்கியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகாசி- விருதுநகா் சாலையில் வடமலாபுரம் ஆற்றுப் பாலத்தின் கீழே ஆண் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அதை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், அவா் வடமலாபுரம் கணேசமூா்த்தி (60) என்பதும், இவா் ஆற்றின் பாலச் சுவற்றில் தூங்கிய போது தவறி ஆற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது மனைவி செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com