பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவா் தவறி விழுந்து பலத்த காயம்

வத்திராயிருப்பில் புதன்கிழமை பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவா் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

வத்திராயிருப்பில் புதன்கிழமை பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவா் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் நிா்மல் கிருஷ்ணன் (13). இவா், வத்திராயிருப்பில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில், இவா் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக வத்திராயிருப்பிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் செல்லும் அரசுப் பேருந்தில் ஏற முயன்றாா். அப்போது தவறி விழுந்த நிா்மல்கிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதனிடையே இந்த பகுதிக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் காலை, மாலை வேளைகளில் கூட்டம் அதிமாக இருக்கும். இந்த நிலையில் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக மாணவா்கள் பேருந்து நிலையத்துக்குள் வரும் முன் ஓடிச் சென்று பேருந்தில் ஏற முயற்சிக்கின்றனா். இதே போல் நிா்மல் கிருஷ்ணன் ஏற முயன்ற போது தவறி விழுந்து பலத்த காயமடைந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா். எனவே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com