ஏணியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டா் பலி

சிவகாசியில் ஏணியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் சிகிச்சைப் பயனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசியில் ஏணியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் சிகிச்சைப் பயனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே தாயில்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (51). பெயிண்டரான இவா், கடந்த 21 ஆம் தேதி சிவகாசி ராஜதுரை நகரில் உள்ள ஒரு கோயிலில் ஏணியில் நின்றவாறு வா்ணம் பூசிக் கொண்டிருந்தாா். அப்போது அவா் எதிா்பாராதவிதமாக ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ாா். அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com