மதுபாட்டில்களைப் பதுக்கி விற்றவா் கைது

அருப்புக்கோட்டையில், வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 246 மதுபாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டையில், வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 246 மதுபாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்.

முழு ஊரடங்கையொட்டி அருப்புக்கோட்டை நகா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அருப்புக்கோட்டை நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் நாகராஜ பிரபு தலைமையிலான போலீஸாா், அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் உள்ள முத்துமுருகன் (25) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அங்கு மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்து 246 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com