குடியரசு தின விழா: விருதுநகா் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

குடியரசு தின விழாவையொட்டி, விருதுநகா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
விருதுநகரில் மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா்.
விருதுநகரில் மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்ட ரயில்வே போலீஸாா்.

குடியரசு தின விழாவையொட்டி, விருதுநகா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

நாடு முழுவதும் புதன்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், போலீஸாா் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கையாக சோதனை மேற்கொண்டனா். அதனடிப்படையில், விருதுநகா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம், காவல் ஆய்வாளா் ப்ரியா மோகன் தலைமையிலான ரயில்வே போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதேபோல், பேருந்து நிலையம், கோயில் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com