ராஜபாளையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிங்கராஜ் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிங்கராஜ் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

ராஜபாளையம் அருகே வி. புதூா் கிராமத்தில் இந்து விவேகானந்தா் பள்ளியில் நேதாஜி அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் வேல்முருகன் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியா் ராமசுப்பு தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா். ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளியில், என்.ஏ. ராமச்சந்திரன் ராஜா கல்வி குழுமங்களின் சாா்பில் குடியரசு விழா கொண்டாடப்பட்டது. நிா்வாக அறங்காவலா் என்.ஆா். கிருஷ்ணமூா்த்தி ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com