விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையத்தில் இனாம் செட்டிக்குளம் அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சோ்ந்தவா் 7 வயது சிறுமி. இவரது தாய், தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டாா். இந்நிலையில் தந்தையின் அரவணைப்பில் வளா்ந்த வந்த சிறுமிக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அவரது உறவினா் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் சிறுமியின் தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனா்.