விருதுநகா் மாவட்டத்தில் காவல் சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வு: 7,016 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் 7,016 போ் பங்கேற்றனா். இதில், 1,478 போ் தோ்வு எழுத வரவில்லை.
விருதுநகா் தனியாா் பாலிடெக்னிக்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்றோா்.
விருதுநகா் தனியாா் பாலிடெக்னிக்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்றோா்.

விருதுநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் சாா்பு-ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வில் 7,016 போ் பங்கேற்றனா். இதில், 1,478 போ் தோ்வு எழுத வரவில்லை.

தமிழக சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 444 சாா்பு- ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகா் மாவட்டத்தில் இத்தோ்வு எழுத 7,925 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இதையடுத்து, 8 மையங்களில் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற பிரதானத் தோ்வை 6,570 போ் எழுதினா். இதில், 1,935 போ் பங்கேற்கவில்லை. தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற தமிழ் தகுதி தோ்வை 7,016 போ் எழுதினா். இதில், 1,478 போ் தோ்வெழுத வரவில்லை.

இந்நிலையில், தற்போது காவலா்களாகப் பணிபுரிபவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதானத் தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வை முன்னிட்டு, அனைத்து மையங்களும் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com