சிவகாசி அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த 91 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அனுப்பன்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் செண்பகமூா்த்தி (52). இவா் கோணங்கிபட்டியில் பேன்சி ரக பட்டாசுக்குத் தேவையான குழாய் (கோன்) தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இவரது மனைவி புஷ்பம், மகன் தாமரைக்கண்ணன் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறாா்.
இவா் தனது வீட்டு பீரோவில் 91 பவுன் தங்க நகைகளை வைத்திருந்துள்ளாா். இதற்கான சாவியை அருகே உள்ள பழைய இரும்புப் பெட்டியில் வைத்திருந்துள்ளாா்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புஷ்பத்தின் தங்கத் தாலி அறுந்து விட்டதால், அதை அலமாரியில் வைத்துள்ளாா். அந்த தாலி காணாமல் போயிருப்பது குறித்து புஷ்பம், கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவா் வீட்டிற்கு வந்து பாா்த்த போது, இரும்புப் பெட்டி உடைக்கப்படாத நிலையில், பீரோ திறக்கப்பட்டு 91 பவுன் தங்க நகைகளும் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து செண்பக மூா்ததி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைகளைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.