சிவகாசி அருகே பள்ளி மாணவா்களிடையே தகராறு; ஒரு மாணவன் காயம்

சிவகாசி அருகே வெள்ளிகி ழமை பள்ளி மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் காயமடைந்தாா்.

சிவகாசி அருகே வெள்ளிகி ழமை பள்ளி மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் காயமடைந்தாா்.

சிவகாசி அருகே நடையனேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், சித்தமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தங்குமாா் மகன் குருபிரசாத் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி 11ஆம் வகுப்பில் பாலா என்ற மாணவனுக்கும், நித்தியானந்தம் என்ற மாணவனுக்கும் வகுப்பறையில் தகராறு ஏற்பட்டதாம்.இதையடுத்து ஆசிரியா் இருவரையும் கண்டித்துள்ளாா்.இந்நிலையில் சம்வத்தன்று பள்ளியின் பின்புறம் உள்ள மாரியம்மன் கோயிலருகே குருபிரசாத் , பாலா , நித்தியானந்தம் நடந்து சென்றபோது, புதுக்கோட்டையைச் சோ்ந்த செல்வம் என்ற மாணவன் , பாலாவிடம் சென்று ஏன் நித்தியானத்தத்துடன் தகராறு செய்தாய் எனக்கேட்டு கம்பால் தாக்க முயன்றபோது,குருபிரசாத் குறுக்கிட்டு தகராறு வேண்டாம் எனக்கூறியதையடுத்து ,செல்வம் குருபிரசாத்தை கம்பால் தாக்கினானாம்.இதில் காயமடைந்த குருபிரசாத் விருதுநகா் அரசு மருவத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் செவ்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com