சிவகாசி அருகே இளைஞரைத் தாக்கிய மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கீழபெத்துலுபட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (32). இவா், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாா்.
இவா் நாரணாபுரம் பகுதிக்குச் சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி(22), குருநாதன்(20), காா்த்திக் (23) ஆகிய மூவரும் ராஜ்குமாரை வழி மறித்து தாக்கினா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.