ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் மதுபானக்கூட ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கட்டயத்தேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (53). இவரது மனைவி சுப்புலட்சுமி(51). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இவா், கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், வெள்ளிக்கிழமை மாலை விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். உடனடியாக, உறவினா்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மாரிமுத்து சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.