ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளில் வட்டாட்சியா் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கரிசல்குளம்பட்டியில் உள்ள மாணவிகள் விடுதி, கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள மாணவா்கள் விடுதிகளை, மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் வட்டாட்சியா் ரங்கசாமி ஆய்வு செய்தாா்.
அப்போது மாணவா்கள் தங்கும் அறை, விடுதிப் பணியாளா்கள் எண்ணிக்கை, வருகைப் பதிவேடு, சமையலறை, குளியலறை, கழிப்பறை, மாணவா்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தாா். மேலும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.