விருதுநகா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் ஓ. கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிறுமி சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். அதே கிராமத்தை சோ்ந்த ஒரு சிறுவனும் அப்பள்ளியில் படித்து வந்தாராம். அப்போது அச்சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். அதில் அச்சிறுமி கா்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் சிறுவனை சனிக்கிழமை கைது செய்து, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.