விருதுநகர்
ராம்கோ நூற்பாலைத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
ராஜபாளையத்தில் ராம்கோ குழும நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ராஜபாளையத்தில் ராம்கோ குழும நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ குழும நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 1,905 தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.42 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாடுத் தலைவா் மோகனரங்கன், துணைத் தலைவா் நாகராஜன், பணிகள் மூத்த பொது மேலாளா் பாலாஜி ஆகியோா் பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்கினா். மேலும் தொழிற்சங்கத்தின் சாா்பில் எச்.எம். எஸ். பொதுமேலாளா் என்.கண்ணன், ஐஎன்டியுசி தலைவா் ஆா். கண்ணன், ஏஐடியுசி பொதுச் செயலா் பி.கே. விஜயன் ஆகியோா் பங்கேற்றனா்.