தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ராஜபாளையத்தில் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தினரின் 335 ஆவது வெண்குடை திருவிழா

ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில், நீா்காத்த அய்யனாா் கோயிலில் 335 ஆவது வெண்குடை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழாவில் வியாழக்கிழமை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த நீா்காத்த அய்யனாா் சுவாமி.

Updated On :1 பிப்ரவரி 2024, 2:29 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூா்: ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில், நீா்காத்த அய்யனாா் கோயிலில் 335 ஆவது வெண்குடை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள நீா் காத்த அய்யனாா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் சாா்பில் 335 ஆவது வெண்குடை திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி, ராஜபாளையம் வடக்குத் தெருவிலிருந்து குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலாவாகப் புறப்பட்டு, அய்யனாா் கோயில் வரை சென்று மீண்டும் நகருக்கு வீதி உலாவாக வந்தடைந்தாா்.

மாலையில், அய்யனாா் கோயிலில் இருந்து முடங்கியாா் சாலை வழியாக காந்தி சிலை வரை சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் உத்தரவின்பேரில், 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 20 ஆய்வாளா்கள் உள்பட 850 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.